திருநெல்வேலி – செப் – 25,2021
நெல்லை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சித்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் அவர்கள்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப உத்தரவின் பேரில், நெல்லை சித்த மருத்துவ கல்லூரி சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் திருத்தணி , கோமளவல்லி Dr.ஜஸ்டஸ் ஆண்டனி அவர்கள், Dr.சுபாஸ் சந்திரன் அவர்கள், Dr.உமா கல்யாணி அவர்கள் Dr.வானமாமலை மற்றும் சித்த மருத்துவ குழுவினர்கள், நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்று மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் சித்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சித்த மருத்துவத்தின் பலன்களையும் அடுத்துவரக்கூடிய கொரோனா வைரஸ் (மூன்றாவது அலை) தாக்கினால் அதிலிருந்து நம்மை பாதுகாத்துகொள்வது பற்றியும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். இரத்த கொதிப்பு பரிசோதனை மற்றும் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. உடன் ஆயுதப்படை காவல் உதவி ஆணையாளர் முத்தரசு , ஆயுதப்படை காவல் ஆய்வாளர் செந்தாமரை கண்ணன் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 150 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்