94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் அரியலூர் அரியலூர் எஸ்.பி தலைமையில் 135,வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது

அரியலூர் எஸ்.பி தலைமையில் 135,வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது

அரியலூர் – செப்-06,2021

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 135 வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் பொது ஏலம் விடப்பட்டு 13,19,720/- ரூபாய் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரபடாமல் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 135 வாகனங்கள் மீது உரிமை கோரி இதுநாள் வரை யாரும் ஆதாரங்களை சமர்ப்பிக்க படாததால் உரிமை கோரப்படாத 135 வாகனங்களை அரசுக்கு ஆதாயம் தேடும் நோக்கத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ. ரமணாசரஸ்வதி, இ.ஆ.ப., ஏலம் விட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் பொது ஏலம் நிர்ணய குழு ஒன்றை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்தார்கள். 5 நபர்கள் கொண்ட இந்த குழுவில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் மண்டல துணை இயக்குனர் மோட்டார் வாகன பராமரிப்பு துறை திருச்சிராப்பள்ளி அவர்கள் துணைத் தலைவராகவும், ஒருங்கிணைப்பாளராக தானியங்கி பொறியாளர் மோட்டார் வாகன பராமரிப்பு துறை திருச்சிராப்பள்ளி அவர்களும், உறுப்பினர்களாக மதன், காவல் துணை கண்காணிப்பாளர், அரியலூர் உட்கோட்டம் அவர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை – I மண்டல போக்குவரத்து அலுவலர் அரியலூர் மற்றும். தொழில்நுட்ப அதிகாரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அரியலூர் ஆகியோர் முன்னிலையில், மணவாளன், துணை காவல் கண்காணிப்பாளர், ஆயுதப்படை அரியலூர் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரபடாமல் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 135 வாகனங்களும் இன்று காலை 10.00 மணிக்கு 208 டோக்கன்கள் வழங்கப்பட்டு பொது ஏலம் தொடங்கப்பட்டது. மாலை 04.00 மணி அளவில் அனைத்து வாகனங்களும் ஏலம் விடப்பட்டது . இதில் 135 வாகனங்களுக்கு அரசு நிர்ணயித்த 2,81,750/- ரூபாய்க்கு மேலாக 13,19,720/- ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு அரசு ஆதாயம் ஆக்கப்பட்டு அரியலூர் அரசு கருவூலத்தில் தொகையானது ஒப்படைக்கப்பட்டது. இதில் காவல்துறை சார்பில் விஜயகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையகம், அரியலூர். மேற்பார்வையில் சபரிநாதன் துணை காவல் கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்