94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி சமுகவிரோத செயல்கள் குறித்த தகவல்தெரிவிக்க ஓட்நர்களுடன் மாவட்ட எஸ்.பி முக்‌‌‌கிய ஆலோசனை

சமுகவிரோத செயல்கள் குறித்த தகவல்தெரிவிக்க ஓட்நர்களுடன் மாவட்ட எஸ்.பி முக்‌‌‌கிய ஆலோசனை

தூத்துக்குடி -செப் -27,2021

தூத்துக்குடி ராசி மஹாலில் இன்று பேரூந்து, சிற்றுந்து, நடத்துனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் – காவல்துறைக்கு உறுதுணையாக சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வேண்டுகோள்.

தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துறை சார்பாக மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராசி மஹாலில் இன்று பேரூந்து, சிற்றுந்து, நடத்துனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோரை அழைத்து தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், நீங்கள் அனைவரும் காவல்துறையினரைப் போலவே ஆங்காங்கே சுற்றிக் கொண்டு வருபவர்கள், உங்களுக்கு நகரில் நடக்கக்கூடிய அனைத்து சம்பவங்களுக்கு தென்படும், அவ்வாறு தென்படும் பட்சத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது தெரியவந்தாலோ, தங்களது வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் எவரேனும் பயணம் செய்வதாக இருந்தாலும், சட்டவிரோதமாக துப்பாக்கி, கத்தி, அரிவாள், கஞ்சா மற்றும் போதைப்பொருள் போன்றவற்றை எடுத்து செல்வதாக இருந்தாலோ காவல்துறையின் அவசர இலவச தொலை பேசி எண். 100 அல்லது மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் 95141 44100 என்ற எண்ணிற்கோ தகவல் அளிக்கலாம், இதில் வாட்ஸ் ஆப் மூலமும் தகவல் தரக்கூடிய வசதியும் உள்ளது.

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், மோட்டார் வாகன விதிமுறைகளை முழுவதுமாக கடைபிடிப்பதுடன் கண்டிப்பாக சீருடை அணிந்துதான் வாகனங்களை இயக்க வேண்டும், தனியார் வாகன ஓட்டுனர்கள் தங்களது ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று போன்றவற்றை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். வாகனத்தில் கண்டிப்பாக தொலைக் காட்சி பெட்டிகள், ஒலிபெருக்கிகள் வாயிலாக திரைப்படங்களோ, பாடல்களோ ஒளிபரப்பவோ, இசைக்கவோ கூடாது. முக்கியமாக சமூதாயம் சார்ந்த பாடல்களோ, படங்களோ கண்டிப்பாக இருக்கக்கூடாது உட்பட பல்வேறு கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் பேரூந்து, சிற்றுந்து, நடத்துனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டு, கலந்தாய்வுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துக்களை பின்பற்றுவோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் . மயிலேறும்பெருமாள், தென்பாகம் உதவி ஆய்வாளர் முத்துகணேஷ், நவநீத கிருஷ்ணன், மத்தியபாகம் தனிப்பிரிவு தலைமைக் காவலர் சுப்பிரமணியன் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்