81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி 7,லட்சம் மதிப்புள்ள 51,செல்போன்கள் மீட்பு செல்‌‌‌போன்‌‌‌கள்‌‌‌ மீட்‌‌‌பதில்‌‌‌ நெல்‌‌‌லை எஸ்‌‌‌.பி தீவிரம்‌‌‌

7,லட்சம் மதிப்புள்ள 51,செல்போன்கள் மீட்பு செல்‌‌‌போன்‌‌‌கள்‌‌‌ மீட்‌‌‌பதில்‌‌‌ நெல்‌‌‌லை எஸ்‌‌‌.பி தீவிரம்‌‌‌

திருநெல்வேலி – செப் – 07,2021

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மாவட்டத்தில் காணாமல் போன 7 லட்சத்தி 67 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான 51 செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரித நடவடிக்கை. மேலும் இயற்கை சூழ்நிலையை பாதுகாக்க மரக்கன்றுகள் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தீவிர தேடுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைசாமி, தலைமையிலான சைபர்கிரைம் போலீஸார், மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் ராஜ், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம்‌, ஆகியோர் அடங்கிய சைபர் கிரைம் காவல்துறையினர் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உரியவர்களிம் செல்போன்கள் ஒப்‌‌‌படைப்பு

மேற்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு ரூபாய் 7 லட்சத்தி 67 ஆயிரத்து 200 மதிப்புள்ள 51 செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து,செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை, உரிய நபர்களிடம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப ஒப்படைத்‌‌‌தார்
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் இதுவரை மாவட்ட சைபர்கிரைம் காவல்துறையினர் 39 லட்சத்து 74 ஆயிரத்து 735 மதிப்புள்ள 315 செல்போன்களை மீட்டுள்ளனர். இதுவரை மீட்கப்பட்ட செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலவச மரகன்றுகள் வழங்கபட்டது

மேலும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்போன் தொலைத்த நபர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி அவற்றை நல்ல முறையில் பேணி வளர்க்கும் படி அறிவுரைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பாராஜூ, திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைச்சாமி, மாவட்ட சைபர் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் .ராஜேஷ், கிரைம் உதவி ஆய்வாளர் ராஜரத்தினம், மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்