அரியலூர் – செப் – 11,2021
அரியலூர் மாவட்டத்தில் இசைவு தீர்ப்பாயத்தில் பணிபுரிவதாக கூறிய போலி நீதிபதி கைது.
அரியலூர் மாவட்டம் பார்ப்பனச்சேரி கிராமம் நடுதெருவில் வசிக்கும் கண்ணன் மனைவி செல்வி என்பவர் தனக்கும் தன் சித்தப்பாவிற்க்கும் இடப்பிரச்சனை இருந்து வந்ததாகவும் கடந்த 06.04.2021 ஆம் தேதி தன் சித்தப்பா இறந்து விட்டதாகவும், இந்நிலையில் பார்ப்பனச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மரியசூசை வியாகுலம் என்பவர் வீட்டிற்கு வந்து தான் இசைவு தீர்ப்பாயத்தில் இருந்து வருவதாகவும் அது கோர்ட் மாதிரி நான் தான் ஜட்ஜ் இந்த இடம் சம்மந்தமாக மாரியம்மாள் மனு கொடுத்துள்ளார் “நான் தான் ஜட்ஜ் நான் கொடுப்பதுதான் தீர்ப்பு நீங்கள் உங்கள் டாக்குமெண்டை கொடுங்கள் என்றும் நோட்டில் கையெழுத்து போடுங்கள் இல்லை வீட்டை காலி பண்ணு என்று மிரட்டியுள்ளார் இசைவு தீர்ப்பாயம் என்ற பெயரில் ரூபாய் 100/- முத்திரைத்தாளில் தீர்ப்பு அளித்துவிட்டதாக பல்வேறு சங்கதிகளை உள்ள தீர்ப்பு ஒன்றை அனுப்பியதாகவும் தனக்கு மரியசூசை வியாகுலம் யார் என்றே தெரியாது என்றும் சொத்து சம்பந்தமாக எந்த பிரச்சனையும் தீர்க்கக் கோரி அவரிடம் முறையிடவில்லை என்றும் மேற்கண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் மாவட்ட குற்ற பிரிவில் 19.08.2021 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் எதிரி மரியசூசை வியாகுலம் என்பவர் தன்னிச்சையாக இசைவு தீர்ப்பாயம் என்ற பெயரில் நீதிமன்றங்களுக்கு இணையானது என்றும் தனக்கு நீதிமன்றங்களுக்கு உண்டான அனைத்து அதிகாரங்களும் உண்டு என்று தன்னிச்சையாக பொது மக்களை ஏமாற்றியும் ஆள்மாறாட்டம் செய்தும் பொய்யான ஆவணங்களை தயார் செய்தும் பணம் பெற்றுக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்ததன் பேரில் இன்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அனிதா ஆரோக்கியமேரி உதவி ஆய்வாளர்கள் சாகுல் ஹமீது மற்றும் அமரஜோதி மற்றும் காவலர்கள் சகிதம் தலைமறைவாக இருந்த எதிரி மரியசூசை வியாகுலம் 64/21, த/பெ. யாக்கோபு, பார்ப்பனச்சேரி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஆவணங்கள் மற்றும் தடயங்களை கைப்பற்றி IM 1 நீதிமன்றத்தில் ஆஜர் செய்தும் மேற்படி எதிரியை 24.09.2021 வரை நீதிமன்ற காவலுக்கு அடைக்க உத்தரவிட்டதன் பேரில் மேற்படி எதிரி பெரம்பலூர் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் பொதுமக்கள் யாரும் போலி இசைவு தீர்ப்பாயத்தை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.