கன்னியாகுமரி – செப் – 05,2021
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள கோயில்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றாவாளிகளை விரைவாக பிடிக்க கன்னியாகுமரி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS உத்தரவின் பேரில் குளச்சல் உட்கோட்ட
காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில்
ஆய்வாளர் தங்கராஜ்,உதவி
ஆய்வாளர்கள்ஜாண்போஸ்கோ சரவணகுமார்,சுந்தர்மூர்த்தி
ஆகியோர் தலைமையில்
தனிப்படைகள் அமைக்கப்பட்டு
04.09.2021 அன்று
குருந்தன்கோடு ஆசாரிவிளை சந்திப்பில் வைத்து சரல் பகுதியை சேர்ந்த அனிஷ்ராஜ் (33)
S/O அல்போன்ஸ் என்பவரை தனிப்படையினர்
கைது செய்தனர். அவரை விசாரணை செய்ததில் அவர் மீது இரணியல் காவல் நிலையத்தில் 10
வழக்குகளும், மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் 4
வழக்குகளும், வெள்ளிசந்தை காவல் நிலையத்தில் 3வழக்குகளும், சுசீந்திரம்காவல் நிலையத்தில் 2
வழக்குகளும், ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் 1வழக்குகளிலும் ஆக 20 வழக்குகளில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்து 600 கிலோ வெண்கல பொருள்களும்
சுமார் 60,000/- ரூபாய் 16 கிராம் தங்க நகைகளும் ஆக மொத்தம் 8,60,000/- ரூபாய் மதிப்பிலான சொத்துகளும்
கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றாவாளிகளை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து கொள்ளை போன பொருட்களை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.