94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் சென்னை காவல் சிறார்களின்‌‌‌ கல்‌‌‌வி மேம்‌‌‌பாட்‌‌‌டிற்‌‌‌காக லேப்டாப் கம்‌‌‌ப்‌‌‌யூட்‌‌‌டர்‌‌‌ வழங்‌‌‌கி உதவிய போலீஸ்‌‌‌...

காவல் சிறார்களின்‌‌‌ கல்‌‌‌வி மேம்‌‌‌பாட்‌‌‌டிற்‌‌‌காக லேப்டாப் கம்‌‌‌ப்‌‌‌யூட்‌‌‌டர்‌‌‌ வழங்‌‌‌கி உதவிய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

சென்னை – செப் – 02,2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ மாணவிகளுக்கு டேப்லட் , கணிப்பொறி மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

சென்னை பெருநகரில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள இளஞ்சிறார், சிறுமியர் தொடர்ந்து கல்வி பயிலவும், திறமையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு பயிற்சி மற்றும் ஊக்கமளித்து, கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து திகழவும், சமூக சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் தகுந்த வழிகாட்டுதலோடு சிறந்து விளங்கவும் 2003ம் ஆண்டு சென்னை பெருநகரில் உள்ள காவல் நிலைய எல்லைகளில் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் (Police Boys & Girls club) துவக்கப்பட்டன.

சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் வழிகாட்டுதலின்பேரில், இக்காவல் சிறார் மன்றங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் சட்டம் மற்‌‌‌றும்‌‌‌ ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள் பராமரிப்பில், சாரண ஆசிரியர் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் கல்வி, விளையாட்டு, யோகா உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டும், அவர்களுக்கு தேவையான கல்வி தொடர்பான புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பயிற்சிகளுக்கான உடைகள், உபகரணங்களும் வழங்கப்பட்டு சிறந்த முறையில் பயிற்சி அளித்து, சிறார் மன்ற மாணவ, மாணவிகள் கல்வியிலும், விளையாட்டுகளிலும் நன்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர். சென்னை பெருநகரில் உள்ள 10 சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ, மாணவிகளுக்கு 100 டேப்லட், 20 கணிப்பொறி மற்றும் 650 கல்வி உபகரணங்களை (Educational Kit) HCL Foundation நிர்வாகத்தின் ஏற்பாட்டின்பேரில் Hope Foundation நிர்வாகத்தினர் வழங்க முன்வந்தனர்.

மாலை 6.00 மணியளவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகம் இரண்டாவது தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப கலந்து கொண்டு காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ மாணவிகளுக்கு டேப்லட், கணிப்பொறி மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் செந்தில்குமார், இ.கா.ப, (வடக்கு) மருத்துவர் N.கண்ணன், இ.கா.ப, ( தெற்கு) , காவல் அதிகாரிகள், HCL Foundation இயக்குநர் நிதிபுன்டிர், Hope Foundation நிர்வாகி மலர்விழி பிரபாத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்