81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லை தலை துண்டிக்கபட்ட கொலைவழக்கில் மேலும் 4,பேர் கைது -எஸ்.பி தீவிர நடவடிக்கை

நெல்லை தலை துண்டிக்கபட்ட கொலைவழக்கில் மேலும் 4,பேர் கைது -எஸ்.பி தீவிர நடவடிக்கை

திருநெல்வேலி – செப் -17,2021

முன்னீர்பள்ளம் வடுவூர்பட்டி அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பேர் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்செவல் நயினார்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சங்கர சுப்பிரமணியன்(37).என்பவரை 13.09.2021 அன்று வடுவூர்பட்டி டாஸ்மார்க் அருகே மர்மநபர்களால் வழிமறித்து தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் IPS., சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்த நிலையில் 15.09.2021 அன்று இக்கொலையில் ஈடுப்பட்ட கொத்தன் குளத்தைச் சேர்ந்த மந்திரம் என்பவரது மகன் மகாராஜா என்ற ராஜா(20), கண்ணன் என்பவரது மகன் பாண்டி என்ற பாண்டியன் என்ற சீயான் பாண்டியன் (31), திருநெல்வேலி டவுன் பாறையடியை சேர்ந்த தாசன் என்பவரது மகன் சீதாராமகிருஷ்ணன் என்ற பப்பி(24), கொத்தன்குளத்தைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் பிரபாகரன்(26), ரத்தினசாமி என்பவரது மகன் அரவிந்த் மற்றும் கொத்தன்குளத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற சீயான் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய கொத்தன்குளத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் ராஜகுரு(37), பச்சை பெருமாள் என்பவரின் மகன்களான விக்னேஸ்வரன்(28), சரவணகுமார் (29), மற்றும் வேலு என்பவரின் மகன் மாரிமுத்து(28) ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் இதுவரை 10 நபர்‌‌‌கள்‌‌‌ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகளை கைது செய்‌‌‌ய காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்