திருநெல்வேலி – செப்-02,2021
காணாமல் போன ரூ.6,90,000 மதிப்புள்ள 58 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு. நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அதிரடி நடவடிக்கை.திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போனது சம்பந்தமாக பெறப்பட்ட மனுக்கள் மீது திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் மூலம் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் ரூபாய் 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 58 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப உரியவர்களிடம் ஒப்படைத்தார் மேலும் இதற்கு முன்பாக இந்த ஆண்டு காணாமல் போன சுமார் 4,95,500/- மதிப்புடைய 43 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்தஆண்டு மட்டும் நடப்பு மாதம் வரை சுமார் 11லட்சத்தி 85 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 101 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையாளர்கள் சுரேஷ்குமார் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சுரேஷ்குமார் குற்றம் மற்றும் போக்குவரத்த , நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் ஆறுமுகம் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் , நெல்லை மாநகர சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகவடிவு சைபர் கிரைம் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் .நடராஜன் அவர்கள்,வித்யாலட்சுமி தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், மற்றும் சைபர் கிரைம் பிரிவு காவல் ஆளினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.