94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி பேருந்தில் நகையை திருடிய 2,பெண்கள்‌‌‌ உட்‌‌‌பட 3,பேர்‌‌‌ கைது 9லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள...

பேருந்தில் நகையை திருடிய 2,பெண்கள்‌‌‌ உட்‌‌‌பட 3,பேர்‌‌‌ கைது 9லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள 30,சவரன் நகைகள்‌‌‌ மீட்பு -கயத்தாறு போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி -ஆகஸ்ட் – 26,2021

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பேருந்தில் சென்ற பெண்ணின் பையில் இருந்து தங்க நகைகளை திருடிய இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது – ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள 30 சவரன் தங்க நகைகள் மீட்பு – கைது செய்து நகைகளை மீட்ட கயத்தாறு காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

கோவில்பட்டி ஹவுசிங் போர்டு காலணியை சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி சுதா (35) என்பவர் கடந்த 23.08.2021 அன்று திருநெல்வேலியிருந்து கோவில்பட்டிக்கு அரசு பேருந்தில் பயணித்த போது கயத்தாறு பேருந்து நிலையத்தில் பேருந்து வந்தபோது தனது கைப்பயில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் திருடு போயுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சுதா அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், காவலர்கள் பாலகிருஷ்ணன், பாலமுருகன், சத்திரியன், பெண் காவலர்கள் முனீஸ்வரி, முத்துலதா மற்றும் செல்வி. முருகேஷ்வரி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து விரைந்து கைது செய்து திருடிய நகைகளை மீட்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினர் நேற்று கயத்தாறு புதிய பேருந்து நிலையத்தில் வாகன தனிக்கை மேற்கொண்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர்களான அய்யப்பன் மனைவி 1) காளியம்மாள் (23) மற்றும் முத்துராஜா (எ) கீரி மனைவி 2) முத்துமாரி (எ) தமிழரசி (22) என்பதும் அவர்கள் கடந்த 23.08.2021 அன்று பேருந்தில் சுதாவின் பையிலிருந்து தங்க நகைகளை திருடியதும், மேலும் இவர்கள் தூத்துக்குடி வடபாகம், நாலாட்டின்புதூர் மற்றும் சிப்காட் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் 10 பவுன் நகைகள் திருடியிருப்பதும், திருடிய நகைகளை அம்பாசமுத்திரம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் 3) அய்யப்பன் (35) என்பவரிடம் கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேற்படி தனிப்படையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்படி காளியம்மாள், முத்துமாரி (எ) தமிழரசி மற்றும் அய்யப்பன் ஆகிய 3 பேரைக் கைது செய்து, தங்க நகைகளை மீட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்