சென்னை – ஆகஸ்ட் – 17,2021
இரவு ரோந்து பணியின்போது, விழிப்புடன் செயல்பட்டு, குற்றவாளியை மடக்கிப் பிடித்த சைதாப்பேட்டை காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை பெருநகர காவல், சைதாப்பேட்டை ரோந்து வாகன பொறுப்பாளர்/உதவி ஆய்வாளர் .சென்னையா, தலைமைக் காவலர் வெங்கடேசன் (த.கா.35444) ஆகியோர் 08.8.2021 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை வி.எஸ். தெரு அருகே பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களை நிறுத்த முயன்றபோது, இருவரும் நிற்காமல் வேகமாக சென்றபோது, காவல் குழுவினர் அவர்களை துரத்திச் சென்றனர். சிறிது தூரத்தில் இரவு பணியிலிருந்து தலைமைக் காவலர் மதுரை (த.கா.16691) என்பவர் எதிரிகளின் இருசக்கர வாகனத்தை மடக்கிசஞ்சய் (எ) நூர் (வ/20) கிண்டி என்பவரை மடக்கிப் பிடித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் குற்றவாளி 26.3.2021 அன்று இரவு அப்பகுதியில் உள்ள ஒரு இனிப்பு கடையின் பூட்டை உடைத்து ரூ.15,000/. பணம் மற்றும் லேப்டாப் திருடிச் சென்றது தெரியவந்தது. குற்றவாளியிடமிருந்து இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.
இரவு ரோந்து பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.