83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் சென்னை "உறங்கா விழிகளாக செயல்படும் சென்னை ரோந்து போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு....

“உறங்கா விழிகளாக செயல்படும் சென்னை ரோந்து போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

சென்னை – ஆகஸ்ட் – 17,2021

இரவு ரோந்து பணியின்போது, விழிப்புடன் செயல்பட்டு, குற்றவாளியை மடக்கிப் பிடித்த சைதாப்பேட்டை காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை பெருநகர காவல், சைதாப்பேட்டை ரோந்து வாகன பொறுப்பாளர்/உதவி ஆய்வாளர் .சென்னையா, தலைமைக் காவலர் வெங்கடேசன் (த.கா.35444) ஆகியோர் 08.8.2021 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை வி.எஸ். தெரு அருகே பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களை நிறுத்த முயன்றபோது, இருவரும் நிற்காமல் வேகமாக சென்றபோது, காவல் குழுவினர் அவர்களை துரத்திச் சென்றனர். சிறிது தூரத்தில் இரவு பணியிலிருந்து தலைமைக் காவலர் மதுரை (த.கா.16691) என்பவர் எதிரிகளின் இருசக்கர வாகனத்தை மடக்கிசஞ்சய் (எ) நூர் (வ/20) கிண்டி என்பவரை மடக்கிப் பிடித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் குற்றவாளி 26.3.2021 அன்று இரவு அப்பகுதியில் உள்ள ஒரு இனிப்பு கடையின் பூட்டை உடைத்து ரூ.15,000/. பணம் மற்றும் லேப்டாப் திருடிச் சென்றது தெரியவந்தது. குற்றவாளியிடமிருந்து இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.

இரவு ரோந்து பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்