83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் புதிதாக கட்டபட்ட காவலர் குடியிருப்பை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார் மாவட்ட எஸ்.பி...

தூத்துக்குடியில் புதிதாக கட்டபட்ட காவலர் குடியிருப்பை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார் மாவட்ட எஸ்.பி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றினார்‌‌‌

தூத்துக்குடி – ஆகஸ்ட் – 30,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 5.64 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர் குடியிருப்பை மாண்புமிகு தமிழக முதல்வர் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று காவலர் குடியிருப்பை ரிப்பன்வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

தமிழக அரசு உத்தரவின்பேரில் திருநெல்வேலி கோட்டம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூபாய் 5.64 கோடி செலவில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர்களுக்கு, தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 35 காவலர் குடியிருப்புகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.

அதன்படி புதிதாக கட்டப்பட்ட 3 ஆய்வாளர் குடியிருப்புகள், 9 உதவி ஆய்வாளர் குடியிருப்புகள் மற்றும் 23 காவலர் குடியிருப்புகள் என மொத்தம் 35 காவல்துறை குடியிருப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பார்வையிட்டு காவலர் குடியிருப்பில் ரிப்பன்வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

இந்த நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் குமரேசன், இளநிலை உதவி பொறியாளர் சுசித்ரா தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், தென்பாக குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், . உதயலெட்சுமி, தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ், ஊரக உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நம்பிராஜன், தென்பாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் மாரிக்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்