83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி ஸ்கேட்டிங்கில்‌‌‌ உலக சாதனை சான்றிதழ் பெற்ற மாணவர்கள் மாவட்ட எஸ்.பியிடம்‌‌‌ வாழ்த்து பெற்றனர்

ஸ்கேட்டிங்கில்‌‌‌ உலக சாதனை சான்றிதழ் பெற்ற மாணவர்கள் மாவட்ட எஸ்.பியிடம்‌‌‌ வாழ்த்து பெற்றனர்

தூத்துக்குடி – ஆகஸ்ட் – 23,2021

தூத்துக்குடி மாவட்டம் சக்தி விநாயகர் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் 75 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து யுனிகோ வேர்ல்டு ரெகார்டு நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற பள்ளி மாணவ மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

கடந்த 15.08.2021 முதல் 18.08.2021 வரை தூத்துக்குடியில் சக்தி விநாயகர் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் ராஜோ பாக்சிங் & பிட்னஸ் கிளப், கிரிட்டி ஆர்ட்ஸ் & டான்ஸ் ஸ்டுடியோ மற்றும் சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் சார்பாக தூத்துக்குடியை சேர்ந்த 5 முதல் 18 வயது பள்ளி மாணவ மாணவிகள் 34 பேர் கலந்து கொண்டு தொடர்ந்து 75 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த சாதனையை பாராட்டி யுனிகோ வேர்ல்டு நிறுவனம் சான்றிதழ் வழங்கி உலக சாதனையில் இடம்பெற செய்துள்ளது.

மேற்படி உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நீண்ட நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை நிகழ்த்திய சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி நிறுவனம் சார்பாக கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய தலைமை காவலர் சிக்டஸ் ஜெனீவர் என்பவரது மகன் யாபேல், ஜேக்சன் ஜியோ, ஷானிஜோ, அந்தோணி ஜெப்ரீன், சுஜய் பாலா, ஸிபித் வாஷ், குரு சித்தார்த் ஆகிய 7 மாணவர்கள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சாதனை நிகழ்த்திய மாணவர்களை பாராட்டி மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்தினார்.

இந்நிகழ்வின் போது ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர் . ஜோசப்ராஜ் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்