94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்‌‌‌ளை கும்பல் கைது...

தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்‌‌‌ளை கும்பல் கைது 7,லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு

தூத்துக்குடி – ஆகஸ்ட் – 31,2021

புதுக்கோட்டை சுற்றியுள்ள பல பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் உட்பட இருவர் கைது – ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் தங்க நகை மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

கடந்த சில மாதங்களில் சிப்காட், தட்டப்பாறை மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியாக காட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள், கடை வீதிகளுக்கு செல்லும் பெண்கள் என தனியாக நடந்து செல்லும் 7 பெண்களிடம் 2 மர்ம நபர்கள் பைக்கில் வந்து, அவர்கள் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துச் சென்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தட்டப்பாறை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு மற்றும் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 5 வழக்குகளும் மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளை தேடி வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் , தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் பாண்டியன், தலைமைக் காவலர்கள் சிவசக்திவேல்,மாணிக்கம், கார்த்திகேயன், கிருஷ்ணன் மற்றும் காவலர் ஜெயபால்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து விரைந்து கைது செய்து திருடிய நகைகளை மீட்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினர் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டதில் புதுக்கோட்டை நடுக்கூட்டுடன் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் பாரதி செல்வம் (20) மற்றும் நடுக்கூட்டுடன்காடு லெட்சுமண பெருமாள் மகன் நாகராஜ் (23) ஆகிய இருவரும் வேலைக்கு செல்லாமல் கையில் நிறைய பணம் வைத்துக்கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து, உல்லாசமாக சுற்றிக்கொண்டு திரிந்தது தெரியவந்தது. அதனால் இவர்கள் மீது சந்தேகமடைந்த தனிப்படையினர் மேற்படி இருவரையும் பிடிப்பதற்கு தீவிர ரோந்துப் பணியை மேற்கொண்டு நேற்று புதுக்கோட்டை பழைய பாலம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மேற்படி இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேலே குறிப்பிட்டுள்ள 7 பெண்களிடம் ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 20 ½ பவுன் எடையுள்ள தங்கச் செயின்களை பறித்து சென்றதையும், மேலும் முத்தையாபுரம் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2 இரு சக்கர வாகனங்களை திருடியதையும் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் மேற்படி இருவரையும் கைது செய்து, அவர்கள் திருடிய 20 ½ பவுன் தங்கச் செயின்கள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேற்படி எதிரிகளில்‌‌‌ ஒருவரான பாரதி செல்வம் என்பவர் 2018ம் ஆண்டு புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனிப்படை போலீசார் இதுபோன்று வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா எனவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கொள்ளையன் பாரதி செல்வம் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 20 ½ பவுன் தங்கச் செயின்கள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த புதுக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான தனிப்படைப் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்