திருநெல்வேலி – ஆகஸ்ட் – 19,2021
இன்று நல்லிணக்க நாள் உறுதிமொழி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில், இன்று நடைபெற்றது.
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைச்சாமி மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள், காவல்துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து நல்லிணக்க உறுதிமொழி நாளான இன்று,
நான் சாதி, இன, வட்டார மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதுமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.