திருச்சி – ஆகஸ்ட் – 15,2021
செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்
திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரி மற்றும் காவல் ஆளிநர்களை அழைத்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாராட்டி வெகுமதியளித்தார்.
காவல் உதவி ஆய்வாளர் வீரமணி, திருமயம் கா.நி. புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் முநிகா 1205 வினோத், முநிகா 1511 கணேசன், ஆயுதப்படை காவலர்கள் நெப்போலியன், ரபேல்தாஸ் மற்றும் சரவணகுமார் ஆகியோரை உள்ளடக்கிய தனிப்படையினர் கரூர் மாவட்டம் தோகைமலை காவல் நிலைய எல்லைப்பகுதியில் கடந்த 11.08.2021 அன்று வாகனச் சோதனை நடத்தி மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 ஜே.சி.பி. வாகனங்கள் மற்றும் 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர். அதே போல காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன், குன்னம் கா.நி., பெரம்பலுர் மாவட்டம் மற்றும் தகா 1464 மாரிமுத்து, முநிகா 662, கார்த்திகேயன், காவலர் 268, மணிகண்டன் மற்றும் முநிகா1355 தினேஷ்குமார் ஆகியோரை உள்ளடக்கிய தனிப்படையினர் கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைப்பகுதியில் கடந்த 11.08.2021 அன்று வாகனச் சோதனை நடத்தி மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 ஜே.சி.பி. வாகனங்கள் மற்றும் 4 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்படி மணல் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து வாகனங்களை கைப்பற்றி சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரின் செயலை பாராட்டும் வகையில் இன்றைய தினம் மத்திய மண்டல காவல்துறை தலைவர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்