83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் சென்னை இளைஞரை கடத்திய கும்பலை கைது செய்த துரைப்பாக்கம் சிறப்‌‌‌பு எஸ்.ஐக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

இளைஞரை கடத்திய கும்பலை கைது செய்த துரைப்பாக்கம் சிறப்‌‌‌பு எஸ்.ஐக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

சென்னை – ஆகஸ்ட் – 19,2021

துரைப்பாக்கம் பகுதியில் வாலிபரை தாக்கி காரில் ஏற்றி வந்த 2 நபர்களை வாகன சோதனையின் போது கைது செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் .ஸ்ரீதரன் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

, துரைப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர், ஸ்ரீதரன், கடந்த 08.08.2021 அன்று இரவு துரைப்பாக்கம், சி.எல்.மேத்தா சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த காரை நிறுத்தி விசாரணை செய்த போது, காரில் காயத்துடன் இரண்டு கைகள் கட்டப்பட்ட நிலையிலிருந்த குணசேகரன் என்பவர் “தன்னை காப்பற்றுங்கள்” என கூறி அலறியுள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளர் காரில் இருந்த 3 நபர்களை கீழே இறக்கி விசாரணை மேற்கொண்டதில், விஜய் தன்னுடைய காதலியுடன் பாரதி அவென்யூ, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த குணசேகரன் மற்றும் அவரது நண்பர் மதிசெல்வம் ஆகிய இருவரும் கிண்டல் செய்து விஜயின் காதலியின் மேல் கை போட்டுள்ளனர். உடனே விஜய் அருகிலிருந்த தனது நண்பர்களை வரவழைத்து மேற்படி குணசேகரனை தாக்கி, மிரட்டி காரில் ஏற்றிவந்தது தெரியவந்தது. நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து குணசேகரனை தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட 1) விஜய் (வ / 23), பம்மல் 2) கிறிஸ்டோபர் (வ / 21), பம்மல் 3) பிரேம் (வ /23), பம்மல் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.மேலும் இதில் சம்பந்தப்பட்ட 17 வயது இளஞ்சிறார் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விஜயின் காதலி, அளித்த புகாரின் பேரில் குணசேகரன் (வ/24), சித்தாலப்பாக்கம் 2) மதிசெல்வம் (வ/ 32), வெட்டுவாங்கேணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீதரன், என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்