81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் சென்னை இருசக்கர வாகனத்தை திருடி வந்த இரண்டு சிறுவர்களை மடக்கிபிடித்த காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

இருசக்கர வாகனத்தை திருடி வந்த இரண்டு சிறுவர்களை மடக்கிபிடித்த காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

சென்னை – ஆகஸ்ட் – 11,2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மாங்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி வந்த 2 சிறுவர்களை மடக்கிப்பிடித்த,பூந்தமல்லி காவல் நிலைய தலைமை காவலர் கோவிந்தராஜ் மற்றும் ஊர்காவல் படை வீரர் அய்யமுத்து ஆகியோரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கடந்த 29.07.2021 அன்று அதிகாலை பூந்தமல்லி காவல் நிலைய தலைமைக் காவலர் கோவிந்தராஜ் மற்றும் ஊர்காவல் படை வீரர் அய்யமுத்து ஆகியோர் பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், ஸ்ரீநகர் பகுதியில் ரோந்து பணியிலிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் போலீசாரை கண்டதும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பினர். சுதாரித்து கொண்ட மேற்படி போலீசார் இருவரையும் இருசக்கர வாகனத்தில் துரத்திச்சென்று மடக்கிப்பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இருவரும் மாங்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி வந்தது தெரியவந்ததின் பேரில் இருவரையும் மாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாங்காடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 16 வயது மற்றும் 17 வயதுடைய இளஞ்சிறார்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.
இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த, பூந்தமல்லி காவல் நிலைய தலைமைக் காவலர் கோவிந்தராஜ் மற்றும் ஊர்காவல் படை வீரர் அய்யமுத்து ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்