81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் சென்னை "கீழ்பாக்கம் உதவி கமிஷனருக்கு போலீஸ் கமிஷனர்‌‌‌ பாராட்டு....

“கீழ்பாக்கம் உதவி கமிஷனருக்கு போலீஸ் கமிஷனர்‌‌‌ பாராட்டு….

சென்னை – ஆகஸ்ட் -19,2021

கீழ்பாக்கம் பகுதியில் பெண்ணிடம் தவறாக நடந்த நபர் மற்றும் செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் என இரண்டு நபர்களை சி.சி.டி.வி கேமரா உதவியுடன் கைது செய்த கீழ்பாக்கம் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர்‌சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்மணி கடந்த 13.07.2021 அன்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் கீழ்பாக்கம் காடர்ன் ரோடு, பவன்ஸ் பள்ளி அருகில் சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர், மேற்படி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார். மேற்படி சம்பவம் குறித்து மேற்படி பெண், கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கீழ்பாக்கம் உதவி ஆணையாளர்‌ ரமேஷ் தலைமையில், உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமைக்காவலர்கள் ஜெகேந்திரன், (த.கா.18331) பென் ஆர்வின்ஷாம், (த.கா.27873) முதல் நிலைக்காவலர்கள் ரெஜின் திருகுமரன் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, அவ்விடத்திலிருந்து, மதுரவாயல்வரை இருந்த சுமார் 100 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, மேற்படி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கவிதாசன் (வ/ 25), விழுப்புரம் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கவிதாசன் தனது நண்பர் சக்திவேல் என்பவருடன் சேர்ந்து கீழ்பாக்கம், அண்ணாநகர் மற்றும் ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்ததின் பேரில், சக்திவேல் (வ/24), கொளத்தூர் என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர 18.08.2021 அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்