94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் காஞ்சிபுரம் தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை – 24 மணி நேரத்திற்குள் 5,பேர்‌‌‌ கைது

காஞ்சிபுரம் – ஆகஸ்ட் – 01,2021

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை – 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் நிலைய எல்லைக்குட்பட்ட மதூர் கிராமம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சண்முகம் த/பெ.பொன்னுசாமி என்பவர் ஒப்பந்த அடிப்படையில் மதூர் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டுவருகிறார். இந்த ஒப்பந்த பணியெடுப்பதில் சண்முகத்திற்கும், அதே ஊரைச் சேர்ந்த முத்து மற்றும் இந்துசேகர் ஆகியோர்களுக்குமிடையே தொழிற்போட்டி இருந்து வந்த நிலையில், கடந்த 30.07.2021 அன்று இரவு சண்முகம் மதூரிலிருந்து வாலாஜாபாத்திற்கு அவரது இருசக்கர வாகனத்தில் மாத்தூர் சந்திப்பு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் இரும்பு பைப்பால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி, தகவலறிந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அவர்கள் விரைவாக சென்று பார்வையிட்டதுடன். எதிரிகள் விட்டுச்சென்ற பல்சர் இருசக்கர வாகனம் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு பைப் ஆகிய தடயங்களை சேகரிக்க புலன்விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டார். மேலும், எதிரிகளை பிடிக்க காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் 1 ) முத்து [56] த/பெ.தாமோதரன். மதூர், அவரது மகன் 2)நித்தியானந்தம் [24], 3 ) இந்து சேகர் [37], த/பெ.கணேசன், மதூர். அவரது சகோதரர் 4 ) ராஜசேகா, த/பெ.கணேசன், மதூர். 5 ) கண்ணன் த/பெ.தாமோதரன், மதூர் மற்றும் சிலர் சேர்ந்து இரும்பு பைப்பால் சண்முகத்தை தாக்கி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து மேற்படி எதிரிகளில் 1)முத்து , 2)நித்தியானந்தம், 3)இந்து சேகர், 4)ராஜசேகர் மற்றும் 5)கண்ணன் ஆகியோர்களை தனிப்படையினர் கைது செய்தனர். இவ்வழக்கில் சிறப்பாகவும் மற்றும் விரைவாகவும் செயல்பட்டு கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் எதிரிகளை கைது செய்த வாலாஜாபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் வெகுவாகப் பாராட்டினார். மேலும், எதிரிகள் மீது விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் மூலமாக எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும் என காவல் கண்காணிப்பாளர் கூறினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்