திண்டுக்கல் – ஆகஸ்ட் – 02,2021
திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து 9 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டம், காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி மற்றும் மஞ்சனூத்து கிராமத்தில் 13 ஆதிவாசி பளியர் குடும்பங்கள் உள்ளன. இதில் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு சார்பாக ஏழு குடும்பத்தினருக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா பெற்று தரப்பட்டது.
இந்நிலையில் வீடில்லாத 9 குடும்பங்களுக்கு திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைவர் விஜயகுமாரி.,இ.கா.ப., திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ரவளி ப்ரியா., இ. கா. ப., அறிவுறுத்தலின்படி பழனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் .சிவா வழிகாட்டுதலின்படி ஆதிவாசி பளியர் மலைவாழ் மக்கள் 09 குடும்பத்தாருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் முயற்சியில் நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஜெயசிங் அவர்கள் தலைமையில் குழுவினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நக்சல் தடுப்பு பிரிவு, லயன்ஸ் கிளப், குட் லைன்ஸ் கிளப் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து உதவி பெற்று 9 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.
இதனையடுத்து ஒன்பது வீடுகளையும்திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமாரி. இ.க.ப., மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ரவளி ப்ரியா. இ.கா.ப., திறந்து வைத்து ஆதிவாசி பளியர் குடும்பங்களிடம் புதிதாக கட்டி முடித்த வீடுகளை ஒப்படைத்தார்