94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் சென்னை "கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை....

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

சென்னை – ஆகஸ்ட் -01,2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி, இறந்த காவலர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கடந்த மே, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் கொரோனா தொற்று பரவல் காலத்தில் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிய சென்னை பெருநகர காவல் ஆளிநர்களில் 1.ஜெ.ஈஸ்வரன், பல்லாவரம் சரக உதவி ஆணையாளர், 2..சி.ஜெயகுமார், மணலி போக்குவரத்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் 3.ஜான் ரூபஸ்,(S-11 தாம்பரம் போக்குவரத்து கா.நி.), 4..ரவிச்சந்திரன் (நவீன கட்டுப்பாட்டறை), 5.பத்மநாபன் (T-3 கொரட்டூர் கா.நி.), 6.அமல்ராஜ் (C-2 யானைகவுனி போ.பு.பி), 7.செல்வம் (ஆயுதப்படை), சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 8.அமல்தாஸ், (T-15 SRMC கா.நி.,), 9.குபேரன் (SCP), 10.ரவி (R-9 வளசரவாக்கம் கா.நி.), 11..இளங்கோவன் (G-1 வேப்பேரி போ.கா.நி.), 12செல்வகுமார் (போக்குவரத்து திட்டமிடல்), தலைமைக் காவலர்கள் 13.தேவன் (நுண்ணறிவுப்பிரிவு), 14.கோபிநாத் (நசரத்பேட்டை கா.நி.), 15.சதிஷ்பாபு (ஆயுதப்படை), 16.மோகன் (SCP), 17..கார்த்திக்கேயன் (போக்குவரத்து கட்டுப்பாட்டறை), முதல்நிலைக் காவலர் 18.பாலசுப்ரமணியன் (V-1 வில்லிவாக்கம் கா.நி.,) காவலர் 19.விக்டர் பென்னட் (ஆயுதப்படை) ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் தன்னுயிர் அர்ப்பணித்தனர்.
காவல் பணியின்போது, கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இறந்த சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த 19 காவல் ஆளிநர்களுக்கு 31.07.2021 அன்று மதியம், எழும்பூர், இராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அர்ப்பணிப்புடன் முன்களப்பணியாற்றி கொரோனா தொற்றால் மறைந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு மலர்வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் காவல் ஆணையாளர், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த மறைந்த காவல் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர்.லோகநாதன், இ.கா.ப., (தலைமையிடம்), மருத்துவர் என்.கண்ணன், இ.கா.ப., (தெற்கு), செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு),பிரதீப்குமார், இ.கா.ப., (போக்குவரத்து).பி.சி.தேன்மொழி, இ.கா.ப., (CCB), இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்