94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் போலி போலீஸ் உதவி கமிஷனர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! எஸ்.பி.யின் அதிரடி நடவடிக்கை!

போலி போலீஸ் உதவி கமிஷனர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! எஸ்.பி.யின் அதிரடி நடவடிக்கை!

திண்டுக்கல் – ஆகஸ்ட் -14,2021

விசாரனையில் அம்பலம் :

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே நெடுஞ்சாலையில் பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன சோதனையின்போது சைரன் வைத்த ஜீப்பில் வந்து போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் எனக் கூறி மிரட்டிய சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். அதன் பின் ஒரிஜனல் போலீசார் அதிரடி விசாரணை நடத்தியதில், அவர் போலி போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் என தெரியவந்தது.

பல லட்சம் மோசடி :

அதனால் விஜயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். விஜயன், பல்வேறு மாநில முதல்வர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் போலீஸ் உடையில் சுற்றித் திரிந்த புகைப்படங்களை வைத்து அவரை ஒருநாள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்தனர் காவல்துறையினர். விஜயன் போலீஸ் அதிகாரி எனக் கூறி முகநூல் நட்பின் மூலம் பல பெண்களிடம் காவல்துறையில் பணி வாங்கித் தருவதாகவும் பல பெண்களை ஏமாற்றி பல லட்சங்களை வாங்கி பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது

அதைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின் பேரில் விஜயன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரியகுளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போலி அசிஸ்டன்ட் கமிஷனர் விஜயன், மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, போலி உதவி கமிஷனரிடம் ஏமாந்த பெண்களிடம் ஒரிஜினல் போலீஸ் அதிரடி விசாரணை செய்ய களம் இறங்கியிருக்கிறார்கள்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்