திருநெல்வேலி – ஆகஸ்ட் – 19,2021
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப துவக்கி வைத்தார் இந்த கண் பரிசோதனை முகாமில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். உடன் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் சுரேஷ்குமார் சட்டம் மற்றும் ஒழுங்கு சுரேஷ்குமார் குற்றம் மற்றும் போக்குவரத்து கலந்து கொண்டார்