94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி சிறப்பாக பணியாற்றிய 5,இன்ஸ்பெக்டர்கள் உட்பட 23,போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய 5,இன்ஸ்பெக்டர்கள் உட்பட 23,போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டு

தூத்துக்குடி – ஆகஸ்ட் -10,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 5 காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் எதிரி யாரென்று தெரியாமல் நீண்டநாட்களாக புலன் விசாரணையில் இருந்து வந்த நிலையில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி கலியாவூரைச் சேர்ந்த பெருமாள் (60) என்பவரை கைது செய்த முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், தலைமை காவலர் சுந்தர்ராஜ், முதல் நிலை காவலர்கள் சதீஷ் தணிகைராஜா, சுரேஷ்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 03.08.2021 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்க நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் தனிப்படை அமைத்து எதிரியை கண்டறிந்து கைது செய்த ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா, உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஜேம்ஸ், மணி, முதல் நிலை காவலர் சந்தனமாரி, காவலர்கள் மாரியப்பன், பலவேசபார்த்திபன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கோவில்பட்டி மேற்கு, நாலாட்டின்புதூர், கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் தொடர்புடைய எதிரியை 04.08.2021 அன்று கைது செய்து அவரிடம் இருந்து 64 சவரன் தங்க நகைகள், 4 இருச்சக்கர வாகனங்கள் மற்றும் பணம் ரூபாய் 2 லட்சம் ஆகியவற்றை கைப்பற்றிய கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சபாபதி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் முருகன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் ரெங்காலெட்சுமி, கொப்பம்பட்டி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் ஸ்ரீராம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 01.08.2021 அன்று புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களில் 5 எதிரிகள் ஒரு சிறுமியை கடத்தி வந்ததை பார்த்து அவர்களை பன்னீர்குளம் சாலையில் வைத்து மடக்கிப் பிடித்த கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், முதல் நிலை காவலர் மோகன்ராஜ், காவலர் பாலமுருகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காவும்,

தூத்துக்குடி அழகர் ஜங்ஷனில் போக்குவரத்து ஒழுங்கு அலுவல் செய்து கொண்டிருந்தபோது பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் குடிபோதையில் காரை ஒட்டி வந்தவரை தடுத்து நிறுத்தி, மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து விபத்து எதுவும் ஏற்படாத வகையில் பணிபுரிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் செல்வராஜ் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

5 காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ்குமார், செல்வி. பவித்ரா, செல்வி. ஷாமளாதேவி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்