திருவண்ணாமலை – ஆகஸ்ட் – 25,2021
இன்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பவன்குமார்,இ.கா.ப., ஜமுனாமரத்தூர் பொதுமக்களிடையே குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்தும், சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்த கூடாது என்றும், சட்டவிரோத நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்தால் உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும், மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரையை வழங்கினார். மேலும் ஹலோ திருவண்ணாமலை போலீஸ் 9988576666 சிறப்பு காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.