94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் சென்னை "டெப்டி கமிஷனர் ஸ்பெஷல் டீம் போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு....

“டெப்டி கமிஷனர் ஸ்பெஷல் டீம் போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு….

சென்னை – ஆகஸ்ட் – 17,2021

தண்டையார்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பேருந்தில் பயணம் செய்து வயதான பெண்களின் தங்க நகைகள் திருடிய 3 பெண்களை கைது செய்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் தனிப்படை காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கடந்த 26.7.2021 அன்று காமாட்சி, (பெ/70), என்பவருடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டு பேசிக் கொண்டு வந்த 3 பெண்கள், வண்ணாரப்பேட்டை, மகாராணி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி ஒரு ஆட்டோவில் அழைத்துச் சென்று காமாட்சி அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை திருடிச் சென்றனர். மேற்படி சம்பவம் குறித்து, காமாட்சி, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதே நாளில் அலமேலு, (பெ/75) என்பவருடன் பேருந்தில் வந்த 3 பெண்கள் பேச்சுக் கொடுத்துக் கொண்டே அலமேலுவிடமிருந்து 2 சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து அலமேலு கொடுத்த புகாரின்பேரில், H-3 தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேற்படி குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத், இ.கா.ப., தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் காதர் மீரான், தலைமைக் காவலர்கள் அசோக்குமார் (த.கா.27169), சரவணகுமார் (த.கா.25944) மற்றும் மனுவேல் (த.கா.20315) ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1) கௌரி, (பெ/41), திண்டுக்கல் 2) சாந்தி (பெ/35), கோயம்புத்தூர் 3) சின்னதாய் (பெ/30), மதுரை ஆகிய 3 பெண்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்