94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் சென்னை "குற்றவாளிகளை மடக்கிபிடித்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு....

“குற்றவாளிகளை மடக்கிபிடித்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

சென்னை – ஆகஸ்ட் -17,2021

மதுரவாயல் பகுதியில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 குற்றவாளிகளை துரத்திச் சென்று பிடித்த பொதுமக்களான எட்வின் ஸ்மின்டோ மற்றும் பால்பாண்டி ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, வானகரம் பகுதியைச் சேர்ந்த எட்வின் ஸ்மின்டோ (வ/25), என்பவர் கடந்த 11.08.2021 அன்று, இரவு வேலம்மாள் பள்ளி அருகிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு, செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனத்தை எடுக்கும்போது, அவ்வழியே ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் எட்வினின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். எட்வின் தனது இருசக்கர வாகனத்தில் குற்றவாளிகளை துரத்திச் சென்றபோது, அவர்கள் செல்லும் வழியில் பால்பாண்டி (வ/30) என்பவரின் செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பினர். பால்பாண்டியும் அவரது இருசக்கர வாகனத்தில் குற்றவாளிகளை துரத்திச் சென்றார். எட்வின் வானகரம், எஸ்.பி. ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு அருகே குற்றவாளிகளின் இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடிக்கவே, பின்னால் வந்த பால்பாண்டியும் பொதுமக்களுடன் சேர்ந்து குற்றவாளிகள் 1) நிர்மல்குமார் (வ/20),போரூர்2) விக்னேஷ் (வ/19),பூந்தமல்லி 3) ஹரிபிரசாத் (வ/19), பூந்தமல்லி ஆகியோரை பிடித்து, மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குற்றவாளிகளிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

செல்போன்பறிப்பு குற்றவாளிகளை, சம்பவத்தின்போதே மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்களான எட்வின் ஸ்மின்டோ மற்றும் பால்பாண்டி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்