94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் சென்னை "வாகனத்தை திருடி தப்பி சென்ற குற்றவாளியை மடக்கி பிடித்த ரோந்து போலீசாருக்கு பெருநகர போலீஸ்...

“வாகனத்தை திருடி தப்பி சென்ற குற்றவாளியை மடக்கி பிடித்த ரோந்து போலீசாருக்கு பெருநகர போலீஸ் கமிஷனர் பாராட்டு…..

சென்னை – ஆகஸ்ட் -25,2021

கோட்டூரபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி தப்பிச்சென்ற குற்றவாளியை மடக்கிப் பிடித்து, கைது செய்த ரோந்து காவலர்‌‌‌களுக்‌‌‌கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பொன்னியம்மன் கோவில் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வரும் அசாரூதின் (வ/22) என்பவர் கடந்த 13.08.2021 அன்று இரவு தனது இருசக்கர வாகனத்தை கடையின் முன்பு நிறுத்தி வைத்து விட்டு கடைக்குள் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் மேற்படி அசாரூதினின் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு தப்பியுள்ளார். அசாரூதின் உடனே அருகில் பணியிலிருந்த கோட்டூர்புரம் காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுநர்/காவலர் சதீஷ் என்பவரிடம் கூறியுள்ளார். உடனே காவலர் சதீஷ் விரைந்து செயல்பட்டு மேற்படி சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறியுள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறை போலீசார் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அபிராமபுரம் காவல் நிலைய ரோந்து வாகனத்தில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் ரோந்து வாகன ஓட்டுநர்/காவலர் பிரபாகரன் ஆகிய இருவரும் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் வி.க.நகர் பாலம் அருகே கண்காணிப்பு பணியிலிருந்த போது, மேற்படி இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு ஓட்டி வந்த சுரேஷ் (வ/42), கள்ளக்குறிச்சி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு இருக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்