83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருச்சி "இலங்கை அகதிகளுக்கு துணை நிற்கும் போலீஸ் கமிஷனர்....

“இலங்கை அகதிகளுக்கு துணை நிற்கும் போலீஸ் கமிஷனர்….

திருச்சி – ஆகஸ்ட் -05,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கடந்த 01.07.2021 அன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை பார்வையிட்டு முகாம்வாசிகளிடம் கலந்துரையாடினார். அவர்களது குறைகளை கேட்ட மாநகர காவல் ஆணையர் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் கடந்த 19.07.2021 அன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் மற்றும் சிறப்பு முகாம்வாசிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், திருச்சி மாநகர காவல் பாரதிதாசன் பல்கலைகழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் SRM மருத்துவ கல்லூரியுடன் இணைந்து இம்‌‌‌முகாம்‌‌‌ நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் பொது நலம், எழும்பியல், தோல், இதயம், வயிறு, காது, மூக்கு மற்றும் தொண்டை பிரிவுகளைச் சார்ந்த மருத்துவர்களை கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 22.07.2021 அன்று இலங்கை அகதிகள் முகாமில் காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் (Police Boys & Girls Club) துவக்கி வைக்கப்பட்டது. இம்மன்றத்தில் குழந்தைகளுக்கான புத்தகங்கள், பல்வேறு விளையாட்டு பொருட்கள் ஆகியவை அவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 26.07.2021 தேதியன்று இலவச சட்டப்பணிகள் குழு மூலம் முகாம்வாசிகள் தங்களது தாய்நாட்டில் சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கான சட்ட ஆலோசனை வழங்கப்பட்டது.

கடந்த 02-08.2021 தேதியன்று தமிழக அரசு மறுவாழ்வுதுறை மற்றும் பெர்ல் தொண்டு

நிறுவனத்துடன் இணைந்து இலவச தொழிற்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இப்பயிற்சி முகாமில்.

அவர்களது விருப்பப்படி தையல், தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிகள் வழங்கப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் சுற்றுச்சுவரின் ஒருபகுதி சிதிலமடைந்துள்ளதால், பாதுகாப்பு இல்லாமல் உள்ளதாகவும், அந்நிய நபர்கள் அனுமதியின்றி உள்ளே பிரவேசிப்பதாகவும் சுற்றுச்சுவர் எழுப்பி பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற முகாம்வாசிகளின் நீண்டநாள் கோரிக்கையை இன்று 04.08.2021-ந்தேதி திருச்சி மாநகர காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து சிதிலமடைந்த சுவர் புதியதாக கட்டப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் முகாம் பகுதியில் CCTV கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பதை திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இச்செயல்பாடுகளுக்கு முகாம்வாசிகள் திருச்சி மாநகர காவல்துறைக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளார்கள். மேலும் இப்பணியை சிறப்பாக செய்த கே.கே.நகர் காவல் நிலைய காவல் ஆளிநர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டுதலை தெரிவித்துள்ளார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்