83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் அரியலூர் "75,வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தை திருமண ஒழிப்பு விழிப்புணர்வு ரதத்தை ஆட்சியர் மற்றும் மாவட்ட...

“75,வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தை திருமண ஒழிப்பு விழிப்புணர்வு ரதத்தை ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி தொடங்கிவைத்தனர் ….

அரியலூர் -ஆகஸ்ட் – 15,2021

தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை :

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், இன்று (15.08.2021) நடைபெற்ற “சுதந்திர தினவிழாவில்” மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி, இ.ஆ.ப. தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

சான்றிதழ் வழங்கிபாராட்டு

தொடர்ச்சியாக, சமாதான புறாக்களை பறக்கவிட்டு, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, தேசிய கொடி வண்ணத்திலான பலூன்களை பறக்கவிட்பட்‌‌‌டது .மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 504 பயனாளிகளுக்கு ரூ.9 இலட்சத்து 89 ஆயிரத்து 650 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 20 காவலர்களுக்கும், 262 அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார். பின்னர், அடுத்த 5 ஆண்டுகளில் மாவட்ட வளர்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிகள் செயல்படுத்தப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த குறுந்தகட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) அவர்கள் பெற்றுக்கொண்டார்.

விழிப்புணர்வு வாகனம் துவக்கம் :

தொடர்ந்து, மாவட்டத்தில் 201 ஊராட்சிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமண தடுப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார் .இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னூலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் ஏழுலை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அ.பூங்கோதை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துகிருஸ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சந்திரசேகர் மற்றும் சுகாதாரத்துறை, வட்டாட்சியர்கள்;, துணை ஆட்சியர்கள், கல்வித்துறை, வருவாய்துறை, வளர்ச்சிதுறை, காவல்துறையினர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்