94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி "கொரனா மூன்றாவது அலையை தடுக்க பொதுமக்‌‌‌கள்‌‌‌ விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க மாவட்ட எஸ்.பி வேண்‌‌‌டுகோள்‌‌‌...

“கொரனா மூன்றாவது அலையை தடுக்க பொதுமக்‌‌‌கள்‌‌‌ விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க மாவட்ட எஸ்.பி வேண்‌‌‌டுகோள்‌‌‌ ….

தூத்துக்குடி – ஆகஸ்ட் – 02,2021

கொரோனா பெருந்தொற்று 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு வாரத்தின் 2ம் நாள் நிகழ்ச்சி இன்று தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று (02.08.2021) தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் எப்படி கைகளை நன்றாக கழுவுவது என்பது குறித்து பொதுமக்களுக்கு செய்துகாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் ஏழை எளிய மக்கள் 50 பேருக்கு அரிசிப்பை மற்றும் பொதுமக்களுக்கு சானிடைசர் மற்றும் முககவசங்கள் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, அதன்படி இன்று எப்படி கைகளை நன்றாக கழுவுவது என்பது குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க அரசு சொல்லக்கூடிய விதிமுறைகள் 4 தான் ஒன்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், இரண்டாவது கட்டாயமாக முககவசம் அணியவேண்டும் அதே போல் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பொதுமக்கள் தேவை இல்லாமல் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும், கைகளை நன்கு ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து தடவை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், இது போன்ற விதிமுறைகளை நாம் கடைபிடித்தால் தான் கொரோனா பெருந்தொற்று 3ம் அலையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆகவே கொரோனா பரவல் 3ம் அலையை தடுப்பதற்கு அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி, தூத்துக்குடி மாநகராட்சி பாத்திமா நகர், நகர் நல மருத்துவர் தினேஷ், சுகாதார ஆய்வாளர் முஷேஃப், மத்திய பாகம் உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள், முத்துக் கிருஷ்ணன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் சுனைமுருகன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ், தலைமைக் காவலர் சுப்பிரமணியன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்