திண்டுக்கல் – ஆகஸ்ட் – 04,2021
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீனிவாசன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்ற உடன் போலீஸ் மீடியா தமிழ் செய்தி நிறுவனத்திற்க்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது
காவல்துறையில் நான் முதல் பணியை தஞ்சை மாவட்டம் வல்லம் சரக காவல் துணைக்கண்காணிப்பாளராக தொடங்கி பின்னர், கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர். தென்காசி காவல் துணைக்கண்காளிப்பாளர். உதவி ஆணையர் திருச்சி கோட்டை மற்றும் பொன்மலை, கூடுதல் காவல் துணைகாணிப்பாளராக திண்டுக்கல் மற்றும் திருச்சி ஊரகம் ஆகிய இடங்களில் பணியாற்றி பதவி உயர்வு பெற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சற்றேறக்குறைய மூன்று ஆண்டுகள் முழுமையாக பணியாற்றினேன் பின்னர் திருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும் பணியாற்றினேன் .
தன்னுடைய எளியை நேர்மையான அணுகுமுறை; விரிவான மக்கள் தொடர் பெரும்பகுதி நேரம் சுற்றாய்வு மேற்கொண்டு குற்றத்தடுப்பு, சட்டம் ஒழுங்கை பேணிக்காத்தல், போக்குவரத்து மேம்பாடு என திறம்பட பணியாற்றி அரியலூர் மாவட்ட மக்கள் நன்மதிப்பை பெற எனக்கு உதவியது
மேலும் கடந்த மாதம் திருவாரூர் அருகே வங்கி ATM ஒன்றில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றது. அது சமயம் மிகவும் துரிதமாக செயல்பட்டு அரை மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தனர் நான் ஏற்கனவே பணியாற்றிய திண்டுக்கல் மாவட்டத்திற்கு மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக காவல் பணி சேவையை தொடர உள்ளது சிறப்பான ஒன்றாகும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சம்மந்தமான பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். கொரோனா நோய் தொற்று சம்மந்தமான அரசு விதிமுறைகள் முறையாக பின்பற்றபடும். குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து சீர்செய்யப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள், மாற்று திறனாளிகள் ஆகியவர்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்வு காணப்படும்.என்று கூறினார்