88 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் காவல்‌‌‌துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது

தூத்துக்குடியில் காவல்‌‌‌துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது

தூத்துக்குடி – ஆகஸ்ட் – 28,2021

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் இன்று உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது – திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் இன்று உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும்போட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் இ.கா.ப தலைமையில் நடைபெற்றது.

போட்டியில்‌‌‌ உயர் அதிகாரிகள் பங்கேற்பு

இப்போட்டியில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் இ.கா.ப தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் , திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இ.கா.ப தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் இ.கா.ப, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இ.கா.ப திருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சுரேஷ்குமார் திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார் , தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சிப்பள்ளி காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் , மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 9வது பட்டாலியன் தளவாய் ஏசு சந்திரபோஸ் , 12 பட்டாலியன் தளவாய் கார்த்திகேயன் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப மற்றும் வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா இ.கா.ப ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் பிரிவு

இதில் இன்சாஸ் (Insas) ரக துப்பாக்கி சுடும் பிரிவுக்கான போட்டியில் வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா இ.கா.ப முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இ.கா.ப ஆகிய இருவரும் 2வது இடத்தையும், தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சிப்பள்ளி காவல் கண்காணிப்பாளர்‌‌‌ ராஜராஜன் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் பிரிவு

அதே போன்று பிஸ்டல் (Pistol) ரக துப்பாக்கி சுடும்போட்டியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் இ.கா.ப முதலிடத்தையும், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் . ஹர்ஷ் சிங் இ.கா.ப 2வது இடத்தையும், திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் இ.கா.ப முதலிடத்தையும், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப 2வது இடத்தையும், வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா இ.கா.ப 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் இ.கா.ப பரிசு வழங்கி பாராட்டினார்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்கள் தடுப்பு குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி தலைமையில் தூத்துக்குடி ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான், காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, தூத்துக்குடி ஊரக உட்கோட்ட தனிப்பரிவு காவல் உதவி ஆய்வாளர் நம்பிராஜன் மற்றும் ஆயுதப்படை தலைமைக் காவலர் . ராஜா உள்ளிட்ட காவல்துறையினர் செய்திருந்தனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்