81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி "நெல்லையில் 40,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள நிலத்‌‌‌தை மீட்ட - நில அபகரிப்பு பிரிவு போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு....

“நெல்லையில் 40,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள நிலத்‌‌‌தை மீட்ட – நில அபகரிப்பு பிரிவு போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு….

திருநெல்வேலி – ஆகஸ்ட் – 31,2021

40 லட்சம் மதிப்புள்ள 8.37 சென்ட் நிலம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு. நில அபகரிப்பு பிரிவு காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு.

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இட்டேரி பகுதியில் அவருக்கு சொந்தமான 8.37 சென்ட் நிலத்தினை தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை சேர்ந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன், அவர்களுக்கு 1997 ம் வருடம் விற்பனை செய்துள்ளார். மேற்படி நிலத்தின் முன்னாள் உரிமையாளரான சுரேஷ் போலி ஆவணம் மூலம் மீண்டும் வேறொரு நபரிடம் விற்பனை செய்துள்ளது செல்வ மோகன்தாஸ் பாண்டியன் அவர்களுக்கு தெரியவந்ததால் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தனது நிலத்தை மீட்டு தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்தார், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு பிரிவு ஆய்வாளர் சாந்தி தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர் திருமலை, தலைமை காவலர் நாகராஜன், மற்றும் இரண்டாம் நிலை காவலர் அய்யாதுரை ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேற்படி நிலத்தை சுரேஷ் 2012ம் வருடம் அவரது மனைவி புவனேஸ்வரிக்கு எழுதிக் கொடுத்ததாகவும், பின்னர் 2012 வருடம் புவனேஸ்வரி சுப்பையாகோபாலகிருஷ்ணன் என்பவருக்கு விற்றதாகவும், பின்னர் 2013ம் வருடம் சுப்பையா கோபாலகிருஷ்ணன் அப்துல் வகாப் என்பவருக்கு விற்பனை செய்து இருப்பதாகவும் தெரியவந்தது. மேற்படி தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு 40 லட்சம் மதிப்பிலான 8.37 சென்ட் நிலத்தினை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,இ.கா.ப., நில உரிமையாளரான செல்வமோகன் தாஸ்பாண்டியன்‌‌‌ இன்று வழங்கினார்.

இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு 40 லட்சம் மதிப்புள்ள 8.37 சென்ட் நிலத்தினை மீட்ட திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., வெகுவாகப் பாராட்டினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்