94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி மெச்சதகுந்த பணிக்காக 26, போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டு

மெச்சதகுந்த பணிக்காக 26, போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டு

தூத்துக்குடி – ஆகஸ்ட்-30,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 26 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கடந்த 26.08.2021 அன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அசல் நாகமாணிக்க கல் என்று நினைத்து போலியான கல்லை வழிப்பறி செய்த வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை விரைந்து கைது செய்து சொத்துக்களை மீட்ட ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் . முத்துராமன், உதவி ஆய்வாளர் முத்துராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பொன்முனியசாமி, சந்திரசேகர், நாரைக்கிணறு காவல் நிலைய முதல் நிலை காவலர் கொடிவேல், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய முதல் நிலை காவல்ர் முருகேஷ்வரன், காவலர்கள் விசு மற்றும் டேனியல்ராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 23.08.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த செயின் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து களவுபோன 33பவுன் நகைகளை மீட்ட கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்து, நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப், காவலர்கள் பாலகிருஷ்ணன், சத்ரியன், கார்த்திக் மற்றும் பெண் காவலர்கள் முத்துலதா, முருகேஸ்வரி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 29.08.2021 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடந்த கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட சிலமணிநேரத்தில் எதிரிகளை 2 பேரை கைது செய்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் பென்சிங், வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ், . மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் திருமலைராஜன், செந்தில்குமார் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துபாண்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிச்சல்லூரில் மத்திய அரசு தொல்பொருள் ஆராய்ச்சி துறைக்கு சொந்தமான திருடுபோன இரும்பு வேலிகளை திருடிசென்ற எதிரிகளை கண்டுபிடித்து களவுபோன சொத்துக்களான சுமார் 700 கிலோ இரும்பு கம்பிவேலிகளை மீட்ட செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கருத்தையா மற்றும் காவலர் நயினார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 25.08.2021 அன்று தன்னுடன் பணிபுரியும் காவலரின் உறவினரின் அறுவை சிகிச்சைக்கு இரத்ததானம் வழங்கி உயிரை காப்பாற்றிய ஆயுதப்பைட மோட்டார் வாகன பிரிவு முதல் நிலை காவலர் பிலிப் அருள்தாஸ் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

3 காவல் ஆய்வாளர் உட்பட 26 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்