தென்காசி – ஜீலை – 27,2021
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பெண்கள் உட்பட 49 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பணி நியமன ஆணையை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை கூறி பணி நியமன ஆணையை வழங்கினார்..மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு காவல்துறை பணியில் நேர்மையுடனும், பொறுப்புடனும் தனது பணியினை திறம்பட செய்ய வேண்டும் என்று வாழ்த்துக்களையும் கூறினார்.