இராணிபேட்டை – ஜீலை – 26,2021
இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 968 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு தமிழக முதல்வர் பணிநியமன ஆணைகளை வழக்கினார். இதன் தொடர்ச்சியாக இன்று மாலை 06.00 மணி அளவில் இராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து தேர்தெடுக்கப்பட்ட 21 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா இ.கா. ப., பணிநியமன ஆணைகளை வழங்கி அவர்களுக்கு வாழ்த்தும், அறிவுரையும் வழங்கினார்