சென்னை – பிப் – 25 ,2021
நமது நிருபர் – ஹெச்.எம்.ரிஸ்வான்
220 கிலோ கஞ்சாவுடன் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் காரில் வந்த சேதுராமன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்து, 220 கிலோ கஞ்சா, 1 கார், 2 செல்போன்கள் மற்றும் ரூ.500 கைப்பற்றி சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்
சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவான போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் ராஜலஷ்மி மற்றும் அசோக்நகர் உதவி ஆணையாளர் மேற்பார்வையில், எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் எம்.ஜி.ஆர்.நகர் நகர் மற்றும் நெசப்பாக்கம் சந்திப்பு அருகே கண்காணித்தபோது காரில் பெருமளவு கஞ்சா கடத்தி வந்த சேதுராமன், வ/49, புழல், மற்றும் சுரேஷ்குமார், வ/40, செங்குன்றம், ஆகிய 2 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 220 கிலோ எடை கொண்ட கஞ்சா, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கார், 2 செல்போன்கள் மற்றும் ரூ.500/-கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்