தூத்துக்குடி – பிப் – 22 ,2021
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பயிற்சி உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி, பயிற்சி முடித்த உதவி ஆய்வாளாகள் ராமலிங்கம் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்கும், ஆதிலிங்கம் கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்கும், காந்தி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கம், முத்துக்கிருஷ்ணன் மற்றும் இசக்கியப்பன் ஆகிய இருவரும் தூத்துக்குடி மத்தியபாகத்திற்கும், ரவீந்திரன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கும்,சுகுமார் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கும், சண்முகசுந்தரம் மற்றும் பிரம்மராஜ் ஆகிய இருவரும் ஏரல் காவல் நிலையத்திற்கும், வெள்ளத்துரை புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும், சுப்பிரமணியன் நாசரேத் காவல் நிலையத்திற்கும், பாலையா முறப்பநாடு காவல் நிலையத்திற்கும், கண்ணன் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கும், சூசைப்பாண்டி மணியாச்சி காவல் நிலையத்திற்கும் ஆகிய 14 உதவி ஆய்வாளர்களை பணி நியமனம் செய்து இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த கலந்தாய்வின்போது நியமனத்தின்போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு ரஇளங்கோவன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல்துறை அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன், உதவியாளர் சதீஷ் கண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.