தேனி – நவ : 29
தென்மண்டல ஐ.ஜி முருகன் உத்தரவின்பேரில் பெரியகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற தேனி மாவட்ட காவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன்படி தேனி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், கலவரங்கள், சமூகவிரோத செயல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த காவல்துறை எந்நேரமும் விழிப்புடன் செயல்படுவதையும், பொதுமக்கள் அச்சமின்றி வாழவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் தேனி மாவட்ட காவல்துறையினர் அடையாள அணிவகுப்பு நடைப
ெற்றது.
இந்த அடையாள அணிவகுப்பு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேனி மாவட்ட காவல்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தியிருப்பதாக பொதுமக்கள் தங்களது நன்றிகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.